Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்ரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., கே.ஆர் பி பிரபாகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.ஆர்.பால் துறை, தலைமை கழக பேச்சாளர்கள் அப்பாதுரை, மதியழகன், முன்னாள் பேரூர் செயலாளர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் விவேகானந்தர், யூனியன் கவுன்சிலர் பி.வி.சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் பவானி, சுந்தர்ராஜ், மாரியப்பன், கணேசன் மற்றும் வார்டு செயலாளர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.